புதுச்சேரி

சாலையில் சுற்றி திரியும் மாடு, நாய்களை படத்தில் காணலாம்.

கடற்கரைச் சாலையில் சுற்றிதிரியும் மாடுகள்: வாகன ஓட்டிகள் அவதி

Published On 2023-06-07 07:34 GMT   |   Update On 2023-06-07 07:35 GMT
  • சாலையில் சுற்றி திரியும் மாடுகள், நாய்கள் வாகனங்கள் வரும்போது அதன் குறுக்கே அங்கும் இங்கும் செல்கின்றன.
  • மாடுகளின் உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, நகராட்சி ஆணையர் தெரிவித்தனர்.

புதுச்சேரி:

காரைக்கால் மாவட்ட த்தில், கடற்கரைச் சாலை மற்றும் அதனை சுற்றியு ள்ள போக்குவரத்து மிக்க முக்கிய சாலைகள் அனைத்தும் கால்நடைகள் உலா வும் சாலைகளாக மாறி வருகின்றன. மேலும் சாலையில் சுற்றி திரியும் மாடுகள், நாய்கள் வாகனங்கள் வரும்போது அதன் குறுக்கே அங்கும் இங்கும் செல்கின்றன. இத னால் காரைக்காலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள், மற்றும் வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதற்கு காரைக்கால் நகராட்சி நிர்வாகம் நடவடி க்கை எடுத்து சாலையில் சுற்றி திரியும் மாடுகள், நாய்களை வேறு இடத்திற்கு அப்புறபடுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் காரைக்காலில் மாடுகளை சாலையில் திரியவிடக்கூடாது மீறினால், மாடுகள் பறிமுதல் செய்ய ப்பட்டு மாடுகளின் உரிமையாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, நகராட்சி ஆணையர் தெரிவித்தனர். ஆனாலும் மாடுக ளை சாலைகளில் விடுவது இன்னும் அரங்கேறி வருகி றது. இதனால் அவைகளை சாலையில் சுற்றிதிரிய விடும் உரிமையாளர்கள் மீது கடு மையான நடவடிக்கை எடு க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்ற னர்.

Tags:    

Similar News