உள்ளூர் செய்திகள்

நெல்லையில் சாலைகளில் சுற்றிதிரிந்த மாடுகளை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள்

Published On 2023-09-25 09:02 GMT   |   Update On 2023-09-25 09:02 GMT
  • சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.
  • போக்குவரத்துக்கு இடையூறாக திரிந்த 4 பசு மாடுகளை சுகாதார பணியாளர்கள் பிடித்தனர்.

நெல்லை:

நெல்லை மாநகர பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

இதனால் சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகளை பிடித்து உரிமையாளர்க ளுக்கு அபராதம் விதிக்கும் படி கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி உத்தர விட்டார்.

அதன்படி மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின் பேரில், டவுன் உதவி வெங்கட்ராமன் மேற்பார்வையில் நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில், சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகளை பிடிக்கும் பணி இன்று காலை நடைபெற்றது.

அப்போது டவுன் ரத வீதிகள், தெற்கு மவுண்ட் ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சென்று சாலை களில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்தனர்.

அப்போது மவுண்ட் ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக திரிந்த 4 பசு மாடுகளை சுகாதார பணியாளர்கள் பிடித்தனர்.

பின்னர் அந்த மாடுகளை நெல்லை டவுன் போலீஸ் நிலையம் எதிரே உள்ள வார்டு அலுவலகத்தில் கட்டி வைத்தனர்.

அதன் உரிமையாளர்க ளுக்கு, உரிய அபராதம் செலுத்தி அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தப் பட்டு உள்ளது. அபராதம் இன்று மாலை வரை உரிமையாளர்களால் செலுத்தப் படவில்லை எனில் அந்த மாடுகளை கோசாலையில் ஒப்படைப்பதற்கு சுகாதார அலுவலர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

Similar News