உள்ளூர் செய்திகள்

கோத்தகிரி நேரு பூங்காவில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி மந்தம்

Published On 2022-09-19 09:31 GMT   |   Update On 2022-09-19 09:31 GMT
  • பூங்காவை சுற்றிலும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடக்கிறது.
  • நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் தயார் செய்யப்பட்டு வருகிறது.

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் தயார் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் நேரு பூங்காவை சுற்றிலும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி 400 அடி நீளம் உயரம் 10 அடி 20 லட்சம் மதிப்பீட்டில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. கட்ட ஆரம்பித்து 6 மாதம் ஆகிறது.

வேலை பாதியளவு கூடமுடியவில்லை. ஆமை வேகத்தில் பணி நடைபெற்று வருவதாகவும், வேகமாக பணிகளை முடிக்க பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News