அதானி குழும விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் போராட்டம்
- பாளை எல்.ஐ.சி. அலுவலகம் எதிரே காங்கிரஸ் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- போராட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் பாளை எல்.ஐ.சி. அலுவலகம் எதிரே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார்.
அதானி குழுமம்
முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
போராட்டத்தில் அதானி குழுமம் மீது சமீபத்தில் வெளியான ஆராய்ச்சி அறிக்கை குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும்.
எல்.ஐ.சி., பாரத ஸ்டேட் வங்கி மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை அதானி குழுமத்தில் முதலீடு செய்ய நிர்பந்தம் செய்யக் கூடாது. முதலீட்டாளர் களை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
இதில் கவுன்சிலர் அனுராதா சங்கர பாண்டியன், காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் ராஜேஷ்முருகன், மாவட்ட செயலாளர் மகேந்திர பாண்டியன், மண்டல தலைவர்கள் ராஜேந்திரன், அய்யப்பன், கெங்கராஜ், முகமதுஅனஸ் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.