உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

வடமதுரையில் காதலனிடமிருந்து பிரித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை

Published On 2023-08-22 06:44 GMT   |   Update On 2023-08-22 06:44 GMT
  • கடந்த 4 நாட்களுக்கு முன்பு திடீரென மாயமான மாணவியை மீட்டு பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
  • வீட்டிற்கு சென்ற மாணவி தனது அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள கம்பிளியம்பட்டியை சேர்ந்த செல்வராஜ்-தங்கம் தம்பதியின் மகள் ஜனனி(16). திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் வடமதுரை போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் மாணவியை மீட்டு அறிவுரைகள் கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு சென்ற மாணவி தனது அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசா ரணையில் இவர் அதே ஊரை சேர்ந்த சிவக்கு மார்(19) என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார்.

அவரிடமிருந்து பிரித்து வந்ததால் வேதனையடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Tags:    

Similar News