உள்ளூர் செய்திகள்

வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு செய்தார்.

குடவாசல் ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

Published On 2023-05-27 09:29 GMT   |   Update On 2023-05-27 09:29 GMT
  • கூத்தலூர் அரசு தொடக்கப்பள்ளியில் சமையலறை கட்டிடம் கட்டும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
  • பள்ளி திறப்பதற்குள் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம், குடவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட 52.புதுக்குடி ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் பகுதியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டத்தின் கீழ் பழுதடைந்த வீடுகள் புதுப்பித்தல் மற்றும் புதிதாக வீடு கட்டும் பணி, மேலபாலையூர் ஊராட்சி அலுவலக கட்டிடம் கட்டும் பணி, 42.அன்னவாசல் ஊராட்சியில் ரூ.4.33 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் சம்பா கட்டளை வாய்க்காலில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணி, கூத்தலூர் அரசு தொடக்கப்பள்ளியில் சமையலறை கட்டிடம் கட்டும் பணி, எரவாஞ்சேரி மணவா ளநல்லூர் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டும் பணி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பள்ளிகளில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை பள்ளி திறப்பதற்குள் விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது குடவாசல் வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் பாஸ்கர், சுவாமிநாதன் (ஊராட்சிகள்) உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News