உள்ளூர் செய்திகள்

குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்களை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

8 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்- கலெக்டர் வழங்கினார்

Published On 2023-01-10 09:23 GMT   |   Update On 2023-01-10 09:23 GMT
  • மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  • ரூ. 9 ஆயிரம் மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள்களை வழங்கினார்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பேசியதாவது:-

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 328 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவவாறு அவர் பேசினார்.

பின்னர் அவர், மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 8 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தலா ரூ. 9000 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள்களை வழங்கினார்.

இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர்சாமிநாதன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News