உள்ளூர் செய்திகள்

நெல்லையப்பர் கோவிலில் தூய்மை பணி

Published On 2023-09-27 09:46 GMT   |   Update On 2023-09-27 09:46 GMT
  • கோவிலில் இன்று சுவர்கள் கற்சிலைகள் -பிரகாரங்களை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.
  • தண்ணீரை பீய்ச்சி அடித்து சுவர்களில் இருந்த எண்ணைய் பிசுக்கு சுத்தப் படுத்தப்பட்டது.

நெல்லை:

நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் கோவிலில் இன்று சுவர்கள் கற்சிலைகள் மற்றும் பிரகாரங்களை தண்ணீர் மூலம் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. நவீன ஏர் கம்ப்ரசர் பைப் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தூண்கள், சுவர்களில் இருந்த எண்ணைய் பிசுக்கு உள்ளிட்ட அழுக்குகளை நீக்கி சுத்தப் படுத்தினர்.

இதனால் பிசுக்குகள் நீங்கி சுவர்கள் கல் தூண்கள் 'பளிச்' என காணப்பட்டது.

Tags:    

Similar News