உள்ளூர் செய்திகள்

நாங்குநேரி அருகே மோதல்- விவசாயி உள்பட 2 பேர் காயம்

Published On 2023-06-02 15:29 IST   |   Update On 2023-06-02 15:29:00 IST
  • ஏசுராஜ் உள்ளிட்டோர் முத்துகிருஷ்ணனை வழி மறித்து தாக்கினர்.
  • காயமடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

களக்காடு:

நாங்குநேரி அருகே உள்ள பெரியநாடார் குடியிருப்பை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 41). விவசாயி. இவரது தோட்டத்தில் அதே ஊரைச் சேர்ந்த அற்புதராஜ் மகன் ஏசுராஜ் (19) நண்பர்களுடன் மது அருந்தியதாகவும், இதனை முத்துகிருஷ்ணன் ஊரில் சொன்னதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த முத்துகிருஷ்ணனை வழி மறித்த ஏசுராஜ், திரவியம் மகன் ராஜா, கனகராஜ் மகன் ஜேம்ஸ், சேர்மத்துரை மகன் சிமியோன், சுப்பிரமணியபுரம் அரவிந்த் ஆகியோர் சேர்ந்து முத்துகிருஷ்ணனை தாக்கினர்.

இதுபோல முத்துகிருஷ்ணனும், ஏசுராஜை தாக்கினார். இதில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி இருவரும் தனித்தனியாக விஜயநாராயணம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் இதுதொடர்பாக முத்துகிருஷ்ணன், ஏசுராஜா உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News