உள்ளூர் செய்திகள்

நாளை சுதந்திர தின விழா கொண்டாட்டம் : போலீஸ் கட்டுப்பாட்டில் பாளை வ.உ.சி. மைதானம்

Published On 2023-08-14 15:05 IST   |   Update On 2023-08-14 15:05:00 IST
  • நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை யொட்டி வ.உ.சி.மைதானத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, அந்த பகுதி முழுமையாக போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
  • ரெயில் நிலையங்கள், மத வழிபாட்டு தலங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்து வருகின்றனர்.

நெல்லை:

நாடு முழுவதும் நாளை (செவ்வாய்க்கிழமை) சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நெல்லை

நெல்லை மாவட்டத்தில் பாளை வ.உ.சி. மைதானத்தில் நாளை காலை 9.05 மணிக்கு கலெக்டர் கார்த்திகேயன் தேசிய கொடியேற்றுகிறார். பின்னர் அவர் திறந்தவெளி ஜீப்பில் நின்றபடி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். தொடர்ந்து அவர் சுதந்தி ரத்தி ற்காக பாடுபட்ட தியாகிகளை கவுரவிக்கிறார்.

பின்னர் அனைத்து துறைகளில் சிறப்பாக பணியாற்றி யவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்குகிறார். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

இதனையொட்டி பாளை வ.உ.சி. மைதானத்தில் பயிற்சி நடைபெற்று வந்த நிலையில், இன்று இறுதி நாள் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் தீயணைப்பு வீரர்கள், போலீசார், ஊர் காவல் படையினர் என 3 துறையினரும் அணிவகுப்பில் ஈடுபட்டனர்.

போலீஸ் கட்டுப்பாட்டில் மைதானம்

நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை யொட்டி வ.உ.சி.மைதானத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, அந்த பகுதி முழுமையாக போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மேற்பார்வையில் சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநகரில் நெல்லை சரக டி.ஐ.ஜி. பிர வேஷ்குமார் உத்தரவின்பேரில் துணை போலீஸ் கமிஷனர்கள் அனிதா, சரவணக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், மத வழிபாட்டு தலங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்து வருகின்றனர். தண்ட வாளங்களில் மோப்பநாய் மூலமாக வெடிகுண்டு சோ தனை நடத்தப்பட்டு வருகிறது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஐ.சி. ஈஸ்வரன் பிள்ளை பள்ளி மைதானத்தில் நாளை காலை கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்துகிறார். இதனை யொட்டி மாவட்டம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவின்பேரில் சுமார் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்காசி ரெயில் நிலை யத்தில் தென்காசி ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர்கள் கருப்பவிநாயகம், மனோகரன், ரவிக்குமார், தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாடாக்கண்ணு மற்றும் போலீசார் அதிரடி சோதனை யில் ஈடுபட்டு வருகின்றனர். ரெயில்வே தண்டவாளம், ரெயில் பெட்டிகள், பயணிகள் உடமைகள் மற்றும் பார்சல் அறை ஆகியவற்றை மெட்டல் டிடெக்டர் மூலமாக தணிக்கை செய்யப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் தருவை மைதானத்தில் நாளை நடைபெற உள்ள சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில் கலெக்டர் செந்தில்ராஜ் பங்கேற்று தேசிய கொடி ஏற்றுகிறார். தொடர்ந்து அவர் போலீசாரின் அணிவகுப்பை ஏற்றுக்கொள்கிறார். பின்னர் தியாகிகளை கவுரவிக்கிறார்.

இதனையொட்டி கடலுக்குள் கடலோர போலீ சார் கப்பல் மற்றும் நவீன படகுகள் மூலம் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ரெயில்நிலையங்கள், பஸ் நிலையங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மேற்பார்வையில் சுமார் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News