உள்ளூர் செய்திகள்

வெடிகுண்டு வீசிய வழக்கு; குண்டர் சட்டத்தில் 5 பேர் கைது

Published On 2023-02-12 07:30 GMT   |   Update On 2023-02-12 07:30 GMT
  • குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை.
  • 5 பேரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

நீடாமங்கலம்:

தஞ்சை மாவட்டம் திருபுவனம் தெற்கு வீதியை சேர்ந்த குரு (வயது 23), பிரித்திவி ராஜ் (20), கும்பகோணத்தை சேர்ந்த சரண்ராஜ் (21), தர்மராஜ் (30), சந்தோஷ் (26) ஆகிய 5 பேர் மீதும் மணஞ்சேரியில் வெடிக்குண்டு வீசிய வழக்கு உள்ளன.

இந்நிலையில் இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவருக்கு, போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் கலெக்டர் உத்தரவுப்படி குரு, பிரித்திவிராஜ் உள்பட 5 பேரையும் போலீசார் குணடர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News