உள்ளூர் செய்திகள்

ஆற்றில் மூழ்கி பலியான தாமரைச்செல்வன்.

தஞ்சை புது ஆற்றில் மூழ்கிய வாலிபர் சடலம் மீட்பு

Published On 2022-08-26 09:53 GMT   |   Update On 2022-08-26 09:53 GMT
  • ஆற்றில் தண்ணீர் சுழல் அதிகமாக இருந்ததால் இருவரும் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
  • தீயணைப்பு துறையினர் ஆற்றில் குதித்து தாமரைச்செல்வன் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

தஞ்சாவூர்:

சேலம் மாவட்டம் எடப்பா டி தாலுகா இருப்பாலி கிராமத்தை சேர்ந்த தாமரைச்செல்வன்(வயது 18), சேலம் ஜலகண்டபுரம் தினேஷ்குமார்(18) உள்பட 50 பேர் திருவாரூரில் தொடங்கிய இந்திய மாணவர் சங்க மாநில மாநாட்டுக்கு கலந்து கொள்ள பஸ்சில் புறப்பட்டனர்.

அந்த பஸ், தஞ்சை வழியாக சென்றபோது பெரிய கோவிலை சுற்றி பார்த்து விட்டு மாநாட்டுக்கு செல்ல முடிவு செய்தனர்.

அப்போது தாமரை செல்வன், தினேஷ்குமார் ஆகிய இரண்டு பேர் மட்டும் பெரிய கோவில் அருகே உள்ள கல்லணைக் கால்வாய் ஆற்றில் குளித்தனர்.

இதில் ஆற்றில் தண்ணீர் சுழல் அதிகமாக இருந்ததால் இருவரும் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

தகவல் அறிந்த தஞ்சை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து இருவரையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் தினேஷ்குமாரை மட்டும் உயிருடன் மீட்டனர்.

ஆற்றில் அடுத்து செல்ல ப்பட்ட தாமரைச்செ ல்வனை தொடர்ந்து தேடி வந்தனர்.

நேற்று இரவு வரை தேடினர். பின்னர் போதிய வெளிச்சம் இல்லாததால் இன்று மீண்டும் தேட முடிவு செய்தனர்.

இந்த நிலையில் இன்று காலை தஞ்சை சாந்த பிள்ளைக்கேட் மேம்பாலம் வண்டிக்கார தெரு பகுதியில் உள்ள ஆற்றில் தாமரை செல்வன் உடல் பிணமாக மிதந்து வந்து கொண்டிருந்தது.

இதைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக தஞ்சை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஆற்றில் குதித்து தாமரைச்செல்வன் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News