உள்ளூர் செய்திகள்
ஓசூரில் பா.ஜ.க. கண்டன ஆர்ப்பாட்டம்
- மின்கட்ட ணத்தை உயர்த்தியுள்ள தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
- மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார்.
ஓசூர்,
தமிழ்நாட்டில் மின்கட்ட ணத்தை உயர்த்தியுள்ள தி.மு.க. அரசை கண்டித்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க.சார்பில் ஓசூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓசூர்-ராயக்கோட்டை சாலையில் உள்ள மின் வாரிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு, மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் கே.எஸ்.நரேந்திரன் கண்டன உரையாற்றினார்.
மேலும் மாவட்ட பொதுச்செயலாளர்கள் பி.எல்.மனோகர், அன்பரசன், துணைத்தலை வர் முருகன், மாவட்ட மருத்துவ பிரிவு தலைவர் டாக்டர் நாகேஷ் குமார் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள், கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.