உள்ளூர் செய்திகள்

கல்வெட்டை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. திறந்து வைத்த காட்சி.

கோவில்பட்டியில் ரூ.5.50 லட்சத்தில் சாலை பணிகளுக்கு பூமிபூஜை

Published On 2022-11-23 09:40 GMT   |   Update On 2022-11-23 09:40 GMT
  • பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
  • சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, கல்வெட்டையும் திறந்து வைத்தார்

கோவில்பட்டி:

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலாஜி நகரில் சாலைப் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.

கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பாண்டவர்மங்கலம் ஊராட்சி பாலாஜி நகரில் ரூ.5.50 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. ஓ.எஸ்.வேலுச்சாமி இல்லத் தெருவில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, கல்வெட்டையும் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், நகராட்சி உதவி பொறியாளர் சரவணன், அ.தி.மு.க. நகர செயலர் விஜயபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஜெயலலிதா பேரவை மாவட்ட பொருளாளர் அம்பிகா வேலுமணி, ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் பழனிசாமி, நகர்மன்ற உறுப்பினர்கள் செண்பகமூர்த்தி, வள்ளியம்மாள் மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News