உள்ளூர் செய்திகள்
தேனி வளர்ப்பு பயிற்சியில் கலந்து கொண்ட மாணவிகள்.
பழனியில் கல்லூரி மாணவிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
- கல்லூரி மாணவிகளுக்கு தேனீ வளர்ப்பு, தேனீகளின் வகைகள், தேனீகளின் குணங்களை அறியும் வகையில் செயல்முறை பயிற்சி நடைபெற்றது.
- மேலும் தேனீக்களால் பூக்களில் ஏற்படக்கூடிய மகரந்த சேர்க்கை, விளைச்சல் அதிகரிக்க தேனீக்களின் பங்கு என்ன என்பது குறித்து ஆய்வு செய்து தெரிந்து கொண்டனர்.
பழனி:
பழனி ஆண்டவர் பெண்கள் கலை பண்பாட்டுக் கல்லூரியில் உயிரியல், விலங்கியல், தாரவியல் பாடப் பிரிவுகளில் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். கல்லூரி மாணவிகளுக்கு தேனீ வளர்ப்பு, தேனீகளின் வகைகள், தேனீகளின் குணங்களை அறியும் வகையில் செயல்முறை பயிற்சி நடைபெற்றது.
மேலும் தேனீக்களால் பூக்களில் ஏற்படக்கூடிய மகரந்த சேர்க்கை, விளைச்சல் அதிகரிக்க தேனீக்களின் பங்கு என்ன என்பது குறித்து கொடைக்கானல் சாலையில் தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த தேன் பண்ணையில் மாணவிகள் தேனீக்களை பற்றி ஆய்வு செய்து தெரிந்து கொண்டனர்.
தேனி ஆராய்ச்சி மற்றும் இயற்கை ஆர்வலர்களான இசாக் மற்றும் பாத்திமா ஆகியோர் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். பயிற்சியில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர்.