உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி

Published On 2022-06-14 10:21 GMT   |   Update On 2022-06-14 10:21 GMT
கோத்தகிரி புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளியில் தொடங்கிய பேரணி வட்டாட்சியர் அலுவலகம்,பேருந்து நிலையம் வழியாக புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளியை வந்தடைந்து.

அரவேணு:

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் ஆணைக்கிணங்க மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தலின்படி நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் குன்னூர் கல்வி மாவட்ட அலுவலர் வழிகாட்டுதலின் படி கோத்தகிரி வட்டாரத்தில் மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கோத்தகிரி புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளியில் தொடங்கிய பேரணி வட்டாட்சியர் அலுவலகம்,பேருந்து நிலையம் வழியாக புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளியை வந்தடைந்து. நிகழ்ச்சிக்கு கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி தலைமை தாங்கினார்.

வட்டார கல்வி அலுவலர் பாலமுருகன், சுப்ரமணி மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜ்குமார் பேரணியின் முக்கிய அம்சங்களை விளக்கி பேசினர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபாலன், காவல்துறை உதவி ஆய்வாளர் அன்பழகன், குன்னூர் ஜெ.சி.ஐ. அமைப்பு தலைவர் பாவனா, எப்.பி.டி. தன்னார்வ அமைப்பு ஜோசப், இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் ஆனந்தன், ஹேரி உத்தம் சிங், தன்னார்வலர்கள் நிர்மலா யமுனா உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் மாணவர்களுக்கு கோத்தகிரி நெல்லை கண்ணன் அவர்கள் குளிர்பானம் வழங்கினார்.

Tags:    

Similar News