உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் தொடங்கி வைத்தார்.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் தொடக்கம்

Published On 2023-04-19 10:21 GMT   |   Update On 2023-04-19 10:21 GMT
  • மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்படுகிறது.
  • அரசுப் பள்ளிகளில் கடந்த 17-ந்தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்ட அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமார் தொடங்கி வைத்தார் .

நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் திருநாவு க்கரசு, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவித் திட்ட அலுவலர் ரமேஷ் குமார், உதவி திட்ட அலுவலர்ரா மலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்பிரச்சார வாகனம் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்க ப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து பொது மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்து கிறது. மேலும் பொது மக்களுக்கு அரசு பள்ளிகளில் மாணவ ர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து துண்டு பிர சுரங்கள் வழங்கப்படுகிறது.

அரசுப் பள்ளிகளில் கடந்த 17-ந்தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.இவ்வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெற தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொதுமக்களுக்கு வேண்டு கோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News