உள்ளூர் செய்திகள்
வேதாரண்யம் கோவிலில், மீனாட்சி அம்மன் வீதி உலா
- மீனாட்சி அம்மன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரார் சுவாமி கோவிலில் மாசி மக உற்சவம் கடந்த மாதம் 13-ந் தேதி உற்சவ கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாள் தோறும் சுவாமி பூத வாகனம் அன்னப்பச்சி,வாகனம், வெள்ளி ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது.
முக்கிய திருவிழாவான திருக்கதவு அடைக்க திறக்கபடுதல் தேரோட்டம் தெப்பம் முதலிய நிகழ்ச்சிகள் நிறைவடைந்த நிலையில்சக்தி திருவிழாவில் மீனாட்சி அம்மன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.