உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையம் சமயபுரத்தில் பாகுபலியை போல மேலும் ஒரு யானை ஊருக்குள் புகுந்தது

Published On 2023-07-11 14:55 IST   |   Update On 2023-07-11 14:55:00 IST
  • யானை ஊருக்குள் நுழையும் போதே பிளிறியபடி ஆக்ரோஷத்துடன் பொதுமக்களை அச்சுறுத்தும்படி வந்தது.
  • யானையை வனத்துறையினர் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை.

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம், ஓடந்துறை, நெல்லித்துறை, சமயபுரம், தேக்கம்பட்டி, குரும்பனூர், கிட்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள், காட்டெருமை, மான், சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.

அவை தற்போது வனப்பகுதியை ஒட்டிய விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதம் செய்வதுடன் மனிதர்களையும் அச்சுறுத்தி வருகின்றன.

மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வன பத்திரகாளியம்மன் கோவில் செல்லும் வழியில் உள்ள சமயபுரம் பகுதியில் பாகுபலி என்ற ஒற்றை யானை தினந்தோறும் சாலையை கடந்து செல்வது வழக்கம். ஆனால் அது யாரையும்,தாக்கவோ, வழிம றிக்கவோ முயற்சிப் பது இல்லை.

இந்த நிலையில் பாகுபலி யானைக்கு அடுத்த படியாக இன்னொரு யானை அதே சமயபுரம் சாலையை கடந்தது. அதை பார்த்த பொது மக்கள் பாகுபலி என்றே நினைத்தனர்.

ஆனால் இந்த யானை ஊருக்குள் நுழையும் போதே பிளிறியபடி ஆக்ரோஷத்துடன் பொதுமக்களை அச்சுறுத்தும்படி வந்தது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் தற்போது அச்சத்தில் ஆழ்ந்து உள்ளனர். எனவே பாகுபலியுடன் ஊருக்குள் சுற்றி திரியும் காட்டு யானையையும் வனத்துறையினர் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News