கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்: கோவையில் முதல் கட்ட முகாமில் 70 ஆயிரம் பேர் விண்ணப்பம் பெறவில்லை
- 2-வது கட்ட முகாம் 16-ந்தேதி வரை நடக்கிறது
- கோவை மாவட்டத்தில் 6 லட்சத்து 33 ஆயிரத்து 901 பேருக்கு ரேஷன் கார்டுகள் உள்ளன
கோவை,
தமிழகத்தில் வசிக்கும் ஏழை-எளிய குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோ றும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை த்தொகை திட்டம் அறிவிக்க ப்பட்டது.
இந்த திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்தை தாண்டி இருக்க கூடாது, வருமானவரி, ஜி.எஸ்.டி வரி செலுத்து வோர் மற்றும் சொந்த நிலம் வைத்து இருப்பவ ர்களுக்கு அனுமதி இல்லை என்று அரசு ஏற்கனவே நிபந்தனை களை விதித்து உள்ளது.
கோவை மாவட்டத்தில் 6 லட்சத்து 33 ஆயிரத்து 901 பேருக்கு ரேஷன் கார்டுகள் உள்ளன. அவர்களுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ண ப்பங்களை வழங்கி னர்.
அப்போது சுமார் 70 ஆயிரம் குடும்பங்கள் விண்ணப்பம் வேண்டாம் என்று கூறி நிராகரித்து விட்டனர். இது ரேஷன் ஊழியர்களை வியப்பில் ஆழ்த்தியது.
இருந்தபோதிலும் அவ ர்கள் விண்ணப்பம் பெறா தது ஏன் என்பது தொட ர்பாக சம்பந்தப்பட்ட ரேஷ ன்கார்டுதாரரிடம் உறுதி மொழி படிவம் எழுதி வாங்கி சென்றனர்.
கோவையில் மகளிர் உரிமைதொகை விண்ண ப்பம் பதிவு செய்வதற்கான முதல்கட்ட முகாம் 839 இடங்களில் நடந்தது. இதில் 4 லட்சத்து 3 ஆயிரத்து 398 பேர் நேரடியாக பங்கேற்று, தங்களின் விண்ணப்பத்தை பதிவு செய்து உள்ளனர். அதாவது கிட்டத்தட்ட 63.7 சதவீதம் பேர் மகளிர் உரிமை தொகைக்காக விண்ண ப்பத்தை பதிந்து உள்ளனர்.
கோவையில் மகளிர் உரிமைத்தொகை விண்ண ப்ப பதிவுக்கான 2-வது கட்டமுகாம் தொடங்கி வருகிற 16-ந்தேதி வரை நடக்க உள்ளது. இதில் மீதம் உள்ள ரேஷன் கார்டுதா ரர்கள் பங்கேற்று, தங்களின் விண்ணப்பத்தை பதிவு செய்ய உள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
கோவையில் அனைத்து ரேஷன்கார்டு தாரர்க ளுக்கும் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான விண்ணங்கள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. அவர்களில் 70 ஆயிரம் பேர் மட்டும் விண்ணப்பம் பெறவில்லை.
கோவையில் மத்திய-மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி, ஜி.எஸ்.டி வரி கட்டுவோர் அதிகம் உள்ளனர். ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் வருமானம் உடையவர்கள் மற்றும் சொந்த நிலம் வைத்து இருப்போரின் எண்ணிக்கை அதிகம்.
கோவையில் அனைத்து ரேஷன்கார்டு தாரர்க ளுக்கும் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான விண்ணங்கள் வழங்க ப்பட்டபோதிலும், அவர்களில் தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு மட்டுமே மாதாந்திர தொகை யாக ரூ.1000 வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.