உள்ளூர் செய்திகள்

கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்

Published On 2022-12-30 14:31 IST   |   Update On 2022-12-30 14:31:00 IST
  • கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
  • இதில் சுமார் 430 மாடுகள், 680 ஆடுகள், 13 வளர்ப்பு நாய்கள் உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சைகள் அளித்தனர்

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரிய கற்கை கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஆண்டாள் தலைமையில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கால்நடை மருத்துவர் செல்வம், செந்தில், பாலமுருகன், மேகநாதன், ஆனந்தநாயகி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சுமார் 430 மாடுகள், 680 ஆடுகள், 13 வளர்ப்பு நாய்கள் உள்ளிட்டவைகளுக்கு பெரியம்மை தடுப்பூசி மருந்து, மாத்திரைகள் உள்ளிட்ட சிகிச்சைகள் அளித்தனர்.


Tags:    

Similar News