உள்ளூர் செய்திகள்

விவசாயியை தாக்கியவர் கைது

Published On 2022-11-23 15:20 IST   |   Update On 2022-11-23 15:20:00 IST
  • விவசாயியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
  • நிலப்பிரச்சினை சம்பந்தமாக முன் விரோதம்

அரியலூர் :

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே மணகெதி கிராமத்தை சேர்ந்தவர் தங்கையன்(வயது 58). விவசாயி. இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் ரஜினி (43) என்பவருக்கும் நிலப்பிரச்சினை சம்பந்தமாக முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று தெருவில் தங்கையன் நின்று கொண்டு இருந்தார். அப்போது ரஜினி. தங்கையனை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இது குறித்து தங்கையன் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் ரஜினி மீது போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News