உள்ளூர் செய்திகள்

விஷம் தின்று முதியவர் தற்கொலை

Published On 2022-12-30 14:29 IST   |   Update On 2022-12-30 14:29:00 IST
  • விஷம் தின்று முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
  • இது குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்கவட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(65). இவர் வீட்டிலேயே கொள்ளு பட்டறை வைத்து வேலை செய்து வந்தார். மேலும் இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வயிற்று வலி அதிகமானதால் வீட்டில் இருந்த எலி மருந்தை(விஷம்) தின்றார். இதையடுத்து குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News