உள்ளூர் செய்திகள்
உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த மாணவருக் கு அரியலூர் கலெக்டர் பாராட்டு
- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை தெருவை சேர்ந்த முருகன்-ஜெயந்தி தம்பதியரின் மகன் கிருபாகர் (வயது 11).
- கிருபாகர் கராத்தே சாதனை நிகழ்த்தும் போட்டியில் ஐந்து நிமிடத்திற்கு மேல் தொடர்ந்து சாகசம் செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை தெருவை சேர்ந்த முருகன்-ஜெயந்தி தம்பதியரின் மகன் கிருபாகர் (வயது 11). பாத்திமா மெட்ரிக் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கராத்தே சாதனை நிகழ்த்தும் போட்டியில் ஐந்து நிமிடத்திற்கு மேல் தொடர்ந்து சாகசம் செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
இதையடுத்து அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி மாணவர் கிருபாகரை அழைத்து பாராட்டி, அவரது திறமையை ஊக்குவிக்கும் விதமாக வாழ்த்து தெரிவித்தார்.