உள்ளூர் செய்திகள்

விவசாயியை தாக்கிய தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்கு

Published On 2022-11-15 15:17 IST   |   Update On 2022-11-15 15:17:00 IST
  • விவசாயியை தாக்கிய தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
  • நிலம் சம்பந்தமான பிரச்சினை

அரியலூர்

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள கோவிந்தபுத்தூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம்(வயது 52). விவசாயியான இவருக்கும், சாத்தம்பாடி கிராமத்தை சேர்ந்த சசிகுமாருக்கும்(40) இடையே நிலம் சம்பந்தமான பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று பாலசுப்பிரமணியத்தின் தந்தை கணேசன் பெயரில் உள்ள தோட்டத்தில் சசிகுமார் பயிர் செய்ததாகவும், இது குறித்து பாலசுப்பிரமணியம் சசிகுமாரிடம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சசிகுமார், அவரது மனைவி கனகவல்லி, தம்பி இளையராஜா ஆகியோர் சேர்ந்து பாலசுப்பிரமணியத்தை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு பாலசுப்பிரமணியம் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் விக்கிரமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் 3 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

Tags:    

Similar News