உள்ளூர் செய்திகள்

மாணவிகளை ஆசிரியர்கள் பாராட்டினர்.

செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

Published On 2022-08-04 09:15 GMT   |   Update On 2022-08-04 09:15 GMT
  • அரசு பள்ளி மாணவர்கள் பங்கு பெறுவதற்காக மாவட்டத்திற்கு இருவர் தேர்வு செய்யப்பட்டனர்.
  • முதலிடம் பிடித்த ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கௌசிகா, இராண்டாமிடம் பிடித்த ஹரிணி ஆகியோருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

வேதாரண்யம் :

வேதாரண்யம்அடுத்த ஆயக்காரன்புலம் பெ ண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள்சென்னை மாமல்லபுரத்தில் நடை பெறும் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். அரசு பள்ளி மாணவர்கள் பங்கு பெறுவதற்காக மாவட்டத்திற்கு இருவர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஆயக்காரன்புலம் பெண்கள் மேல்நிலைபள்ளி 11-ம் வகுப்பு மாணவிகள் கெளசிகா, ஹரிணி சென்னை அழைத்துச் செல்லப்பட்டனர்.

மாணவி கெளசிகாவை தமிழக அரசு சென்னையில் இருந்து பெங்களூருக்கு விமானம் மூலம் இலவசமாக அழைத்து சென்று மீண்டும் சென்னை போட்டியில் பங்குபெறச் செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்ததனர்.

இதில் நாகைப்பட்டினம் மாவட்டத்தில் 19 வயதுக்கு ட்பட்ட மாணவர்கள் பிரிவில் முதலிடம் பெற்ற ஆயக்காரன்புலம் அரசு பெண்கள்மேல்நி லைப்பள்ளி மாணவி கௌசிகா இராண்டாம் இடம்பெற்ற ஹரிணி ஆகியோ ருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது .பள்ளி தலைமை ஆசிய ர்ஸ்டெல்லாஜேனட் தலை மையில் நடைபெற்ற விழாவில் மாணவிகளுக்கு சால்வை, திருக்குறள் நூல்பரிசளித்தனர். இந்த நிகழ்ச்சியில் உதவி தலைமை யாசிரியர் பரஞ்ஜோதி, ஆசிரியர் சிலம்புசெல்வன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழுவினர் பொற்றோர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News