உள்ளூர் செய்திகள்

நீலகிரி மாவட்ட இந்திய மக்கள் மன்ற தலைவராக குன்னூர் எம்.கண்ணன் நியமனம்

Published On 2023-10-28 08:56 GMT   |   Update On 2023-10-28 08:56 GMT
  • ஜாதி, மதபேதமின்றி பல்வேறு நற்பணிகளை செய்ததற்காக விருதுகள் வழங்கி பாராட்டு
  • எம்.கண்ணனுக்கு அரசியல் கட்சியினரும், பொதுநல அமைப்புகளும் வாழ்த்து

அருவங்காடு,

நீலகிரி மாவட்ட எக்ஸ்னோரா அமைப்பின் தலைவராக குன்னூரை சேர்ந்த எம்.கண்ணன் ஜாதி, மதபேதமின்றி பல்வேறு நற்பணிகளை செய்து வருகிறார். இதற்காக அவருக்கு பல விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் நீலகிரி மாவட்ட இந்திய மக்கள் மன்ற தலைவராக குன்னூர் எம்.கண்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை மேற்கண்ட அமைப்பின் தேசிய தலைவர் மணிமொழியான் செய்து உள்ளார்.

நீலகிரி மாவட்ட இந்திய மக்கள் மன்ற தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள குன்னூர் எம்.கண்ணனுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுநல அமைப்புகளும் வாழ்த்து தெரிவித்து வருகின்றன.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கீழ் இந்திய மக்கள் மன்றம் மற்றும் தேசிய பாரத் சேவாக் சமாஜ் உள்ளது. இந்த அமைப்புகளின் தென்னிந்திய தமிழக அலுவலகம் திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News