உள்ளூர் செய்திகள்
பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
- தமிழ்நாட்டில்போதைப் பொருளை ஒழிப்பதற்கு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கை களை எடுத்து வருகிறார்.
- போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு இயக்கத்தை மேற்கொள்ளும்படிசட்டமன்ற உறுப்பினர்களுக்கு கைப்பட கடிதம் எழுதினார்.
நாகப்பட்டினம்:
தமிழ்நாட்டில் போதைப் பொருளை ஒழிப்பதற்கு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கை களை எடுத்து வருகிறார்.அந்த வகையில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு இயக்கத்தை மேற்கொள்ளும்படிசட்டமன்ற உறுப்பினர்களுக்கு கைப்பட கடிதம் எழுதினார்.
மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை அழைத்து கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்.அதைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற, போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஷா நவாஸ் எம்.எல்.ஏ பங்கேற்று உரையாற்றினார்.
போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழியை எடுத்ததோடு, கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கி வைத்தார்.இதல் நாகப்ப ட்டினம் நகர்மன்றதலைவர் இரா.மாரிமுத்துஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.