உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த சிவேந்திரர்.

சிவேந்திரருக்கு அன்னாபிஷேகம்

Published On 2023-10-29 10:27 GMT   |   Update On 2023-10-29 10:27 GMT
  • பிரதோஷம் தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறுவது வழக்கம்.
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் வடக்கு வீதியில் ராஜ கோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் கங்கை பார்வதி தேவி சமேதராக சிவேந்திரர் மற்றும் சிவபெருமான் முழுஉருவத்தில் காட்சி அளிக்கின்றனர்.

இங்கு பிரதி பிரதோஷம் தோறும் சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிவேந்திரருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தார்கள்.

Tags:    

Similar News