உள்ளூர் செய்திகள்
- சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
- 100-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்துக்கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.
நாகப்பட்டினம்:
நாகையில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாலை நேர தர்ணா போராட்டம் நடைப்பெற்றது. மாவட்ட தலைவர் ராணி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நாகை மாலி எம்.எல்.ஏ. கலந்துக்கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் மாவட்டச் செயலாளர் அன்பழகன், தொழிற்சங்க கூட்டமைப்பு மாவட்ட தலைவர் சிவக்குமார் உள்ளிட்ட 100 -க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்துக்கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.