உள்ளூர் செய்திகள்

காரைக்கால் அருகே ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

Published On 2023-06-01 07:25 GMT   |   Update On 2023-06-01 07:25 GMT
  • ஆற்றுப் பாலத்தில், அடையாளம் தெரியாத முதியவர் ரயிலில் அடுப்ப ட்டு இறந்து கிடந்தார்.
  • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி:

காரைக்கால் பிராவிடை யான் ஆற்றுப் பாலத்தில், அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ரயிலில் அடுப்ப ட்டு இறந்து கிடந்தார். இந்த தகவல் குறித்து நாகை மாவட்டம் நாகூர் ரயில்வே ஸ்டேசன் மாஸ்டர் திரு.பட்டினத்தில் கேட்கீப்பராக தற்காலிகமாக வேலை பார்த்து வரும் ரத்தன்கு மாரை தொடர்பு கொண்டு தெரிவித்தார்.

இதுபற்றி ரத்தன்குமார் திரு.பட்டினம் போலீசா ருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 65 வயது மதிக்கத்தக்க முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News