உள்ளூர் செய்திகள்
நெல்லையில் மொபட் மீது ஆம்புலன்சு மோதி முதியவர் பலி
- கணபதி முன்னீர்பள்ளத்திற்கு மொபட்டில் சென்றார்.
- ஆம்புலன்சு மோதியதில் தூக்கி வீசப்பட்ட கணபதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
நெல்லை:
நெல்லையை அடுத்த தருவை பாலாஜி நகரை சேர்ந்தவர் கணபதி(வயது 75). இவர் நேற்று தருவையை அடுத்த முன்னீர்பள்ளத்திற்கு மொபட்டில் சென்றார். பின்னர் மேலமுன்னீர்பள்ளம் அருகே ஒரு பெட்ரோல் பங்க் அருகே வந்த போது மொபட்டில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நெல்லையை நோக்கி வந்த அரசு மகப்பேறு நல ஆம்புலன்சு கணபதி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கணபதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை கணபதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.