உள்ளூர் செய்திகள்

இளைஞர் பெருமன்ற ஒன்றிய பேரவை கூட்டம் நடந்தது.

அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய பேரவை கூட்டம்

Published On 2022-11-17 07:46 GMT   |   Update On 2022-11-17 07:46 GMT
  • திருமருகலிருந்து திருப்பயத்தங்குடி வரை கூடுதலாக பஸ் இயக்க வேண்டும்.
  • திருமருகலை தனி தாலுகாவாக உருவாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய பேரவை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு இளைஞர் மன்ற ஒன்றிய பொருளாளர் விமல்ராஜ் தலைமை தாங்கினார்.இளைஞர் மன்றம் ஒன்றிய செயலாளர் சந்திரமோகன், ஒன்றிய தலைவர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், விவசாய சங்க மாவட்ட செயலாளர் பாபுஜி, இளைஞர் மன்ற மாவட்ட செயலாளர் மாரிகார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் திருமருகலில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை கொண்டு வர வேண்டும், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களின் நலன் கருதி திருமருகலிருந்து திருப்பயத்தங்குடி வரை கூடுதலாக பஸ் இயக்க வேண்டும், ஒன்றிய பகுதிகளில் மழைக்காலங்களில் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும், திருமருகலை தனி தாலுக்காவாக உருவாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், கட்சியின் ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News