உள்ளூர் செய்திகள்

பைக் மீது லாரி மோதி விபத்து- நீதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2023-06-22 04:46 IST   |   Update On 2023-06-22 04:46:00 IST
  • சாலையை சீரமைக்க வேண்டுமென ஜிவாரி சிமெண்ட் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
  • பொது மக்கள் நிலக்கரி ஏற்றி வந்த 50க்கும் மேற்பட்ட லாரிகளை சிறை பிடித்தனர்.

பொன்னேரி:

மீஞ்சூர் அடுத்த கே. ஆர் பாளையத்தை சேர்ந்தவர் ரேவந்த் (26). இவர் மீஞ்சூர் அடுத்த வட சென்னை அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக தனது நண்பர் கௌதம் உடன் இருசக்கர வாகனத்தில் ரேவந்த் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, காட்டுப்பள்ளி அருகே நிலக்கரி கிடங்கில் இருந்து கும்மிடிப்பூண்டிற்கு நிலக்கரி ஏற்றி செல்வதற்காக வந்த லாரி காமராஜர் துறைமுகம் சாலை அத்திப்பட்டு ஜுவாரி சிமெண்ட் சாலை அருகே பைக் மீது மோதியது.

இதில் பின்னால் அமர்ந்திருந்த ரேவந்துக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில் ரேவந்த் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அண்ணா நகர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று ரேவந்த்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த கே.ஆர் பாளையம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் நீதி கேட்டு அடிக்கடி விபத்து ஏற்படுவதால் போக்குவரத்து போலீசார் நியமிக்க வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டுமென ஜிவாரி சிமெண்ட் சாலையில் மறியலில் ஈடுபட்டு நிலக்கரி ஏற்றி வந்த 50க்கும் மேற்பட்ட லாரிகளை சிறை பிடித்தனர்.

தகவல் அறிந்த மீஞ்சூர் காவல் ஆய்வாளர் டில்லி பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததின் பேரில் கலைந்து சென்றனர். இதனால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News