உள்ளூர் செய்திகள்

பிரதமர் கிஷான் திட்டத்தில் பயன்பெற வங்கி கணக்கில் ஆதார் இணைக்க வேண்டும்- விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்

Published On 2023-08-10 09:23 GMT   |   Update On 2023-08-10 09:23 GMT
  • பிரதமர் கிஷான் திட்டத்தின் கீழ் கோவையில் மட்டும் 62,659 விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர்.
  • கோவை மாவட்டத்தில் 5817 விவசாயிகள் இதுவரை வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை.

கோவை,

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பிரதமர் கிஷான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவையில் மட்டும் 62,659 விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ள வங்கி கணக்கில் மட்டும் தான் பணம் செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. கோவை மாவட்டத்தில் 5817 விவசாயிகள் இதுவரை வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை. எனவே அவர்கள் உடனடியாக வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்க வேண்டும்.

இதற்காக அவர்கள் சேமிப்பு கணக்கு வைத்து உள்ள வங்கிக்கு நேரடியாக சென்று ஆதாரை இணைக்கலாம். வங்கியில் கணக்கு இல்லாத விவசாயிகள் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி மூலம் ஜீரோ பேலன்ஸ் அடிப்படையில் கணக்கு தொடங்கலாம். அப்போது அவர்களின் ஆதார் எண் 48 மணி நேரத்துக்குள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு விடும்.

இதுகுறித்து மேலும் விவரங்கள் பெற விரும்புவோர் அந்தந்த பகுதிகளில் உள்ள வேளாண்மை விரிவாக்க மைய அதிகாரிகள் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகளை அணுகி பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News