உள்ளூர் செய்திகள்

குடிபோதையில் வாகனத்தை ஓட்டி வந்த வாலிபர் கைது- வாகனம் பறிமுதல்

Published On 2023-03-31 15:42 IST   |   Update On 2023-04-03 11:51:00 IST
  • தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஓட்டல் அருகில் டெம்போ டிராவளர் வாகனம் சாலையில் தாறுமாறாக வந்தது.
  • குடிபோதையில் வாகனத்தை ஓட்டி வந்தது தெரியவந்தது.

கடலூர்:

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன், மாவட்டத்தில் கடைகோடி பகுதிகளான வேப்பூர், ராமநத்தம், சிறுபாக்கம் ஆகிய இடங்களில் நேற்று இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஓட்டல் அருகில் டெம்போ டிராவளர் வாகனம் சாலையில் தாறுமாறாக வந்தது. இந்த வாகனத்தை பின் தொடர்ந்த போலீஸ் சூப்பிரண்டு, சிறிது தூரத்தில் வாகனத்தை மடக்கி பிடித்தார்.

வாகனத்தை ஓட்டி வந்த வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் பாலு மகன் வெற்றிவேல் (வயது 38). குடிபோதையில் வாகனத்தை ஓட்டி வந்தது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தை பறிமுதல் செய்து வேப்பூர் போலீஸ் நிலையத்தில் ஓப்படைத்தார். மேலும், குடிபோதையில் வாகனத்தை தாறுமாறாக ஓட்டிவந்த வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.

Tags:    

Similar News