உள்ளூர் செய்திகள்

கோவையில் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்

Published On 2023-08-04 09:22 GMT   |   Update On 2023-08-04 09:22 GMT
  • கணவர் இளம்பெண்ணிடம் கள்ளக்காதலை கைவிடுமாறு கண்டித்தார்.
  • மனைவியை மீட்டு தரக்கோரி கணவர் கோவில்பாளையம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

கோவை,

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் 32 வயது இளம்பெண். இவர் கணவருடன் கோவை விளாங்குறிச்சியில் குடியிருந்து வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் ஆகியோர் உள்ளனர். இவர்கள் தர்மபுரியில் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வருகின்றனர். இளம்பெண் அவரது கணவருடன் வசித்து வந்தார்.

இந்தநிலையில் இளம்பெண்ணின் வீட்டிற்கு அவரது உறவினரான 35 வயது கட்டிட தொழிலாளி வந்து சென்றார். அப்போது இளம்பெண்ணுக்கும், கட்டிட தொழிலாளிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் இளம்பெண் கட்டிட தொழிலாளியை அவரது வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் தனது கணவரிடம் கழிவறைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். பின்னர் அவர் அவரது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.

நீண்ட நேரம் ஆகியும் இளம்பெண் திரும்பி வராததால் அவரை அவரது கணவர் பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் எந்த பலனும் இல்லை. பின்னர் அவர் மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.  

Tags:    

Similar News