உள்ளூர் செய்திகள்

சாலை மறியலில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

பண்ருட்டியில் இளம் பெண்ணை ஆசை வார்த்தை கூறி கடத்திய வாலிபர்:உறவினர்கள் திடீர் சாலை மறியல் -டி.எஸ்.பி.சமரசம்

Published On 2023-07-23 07:11 GMT   |   Update On 2023-07-23 07:11 GMT
  • இது பற்றி பண்ருட்டி போலீ சில் இவரது பெற்றோர்கள் புகார் கொடுத்தனர்.
  • 75 பேர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்தனர்.

கடலூர்:

பண்ருட்டி திருவதிகை எடப்பாளையம் தெருவை சேர்ந்தவர் 19 வயது இளம் பெண். இவர் கடந்த 21 -ந் தேதி வீட்டில் இருந்த வர் திடீரென காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது பற்றி பண்ருட்டி போலீ சில் இவரது பெற்றோர்கள் புகார் கொடுத்தனர். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காணாமல் போன இளம்பெண்ணை தேடி வந்தனர். அந்த இளம் பெண் பனங்காட்டுத் தெருவை சேர்ந்த வாலிபர் விஜயபாஸ்கர் (25)காதல் வலையில் சிக்கிஅவரது ஆசை வார்த்தைகளால் மயங்கி 21-ந் தேதி இரவு 8 மணிக்கு வீட்டில் இருந்த வர் விஜய் பாஸ்கருடன் விழுப்புரம் சென்று திரு மணம் செய்து கொண்டு நேற்று பண்ருட்டி போலீஸ் நிலையம் வந்து ஆஜரானார்கள். அவர்களை பண்ருட்டி இன்ஸ்பெக்டர் க ண்ணன், பண்ருட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் விசாரித்தனர். அவர்களிடம் பெண்ணின் உறவினர் மற்றும் பெற்றோர்களுடன் பேசிப் பார்த்தனர்.

நான் திருமணம் செய்து கொண்டேன். விஜய பாஸ்கருடன் தான் செல்வேன் என்று எழுதிக் கொடுத்து விட்டு சென்றார்கள். உறவினர் மற்றும் பெற்றோர்கள் பெண்ணை வாலிபருடன் செல்ல விடா மல்விடாமல் தடுத்த போது போலீசார் விலக்கி விட்டு 2பேர்களை யும் அனுப்பி வைத்துள்ளனர். போலீசார் வேண்டும் என்று என் மகளை அனுப்பி வைத்து விட்டார்கள். நாங்கள் இன்னும் ஒரு மணி நேரம் எங்கள் மகளுடன் பேசி இருந்தால் எங்கள் மகள் எங்களுடன் வந்திருப்பார் என்று என்று கூறி பண்ருட்டி4 முனை சந்திப்பில் பெண்ணின் பெற்றோர்கள் தலைமை யில் 75 பேர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்தனர்.தகவல் அறிந்ததும் பண்ருட்டி டி.எஸ்.பி.சபியுல்லா பேச்சு வார்த்தை நடத்தினார்.நீண்ட நேரம் பேச்சு வார்த்தைக்கு பின் சாலை மறியலில் ஈடு பட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News