உள்ளூர் செய்திகள்

களக்காடு அருகே இளம்பெண் மாயம்

Published On 2023-06-20 14:47 IST   |   Update On 2023-06-20 14:47:00 IST
  • கவிதா திருமணமாகி கணவர் பிரவீன்குமாருடன் சென்னையில் வசித்து வருகிறார்.
  • பல்வேறு இடங்களில் தேடியும் கவிதா பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் களக்காடு போலீசில் புகார் செய்தார்.

களக்காடு:

களக்காடு அருகே உள்ள கீழஉப்பூரணி மேலத்தெருவை சேர்ந்தவர் அந்தோணி சாமி. இவரது மகள் கவிதா (வயது 21) திருமணமாகி தனது கணவர் பிரவீன்குமாருடன் சென்னையில் வசித்து வருகிறார். இவர் கடந்த 25-ந் தேதி கீழ உப்பூரணியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்தார்.

அதன் பின் கடந்த 25-ந் தேதி களக்காட்டிற்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனல் அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் சீதை (60) பல்வேறு இடங்களில் தேடியும் கவிதா பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் களக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News