உள்ளூர் செய்திகள்

கோவை அருகே 2 பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து இளம்பெண் தற்கொலை முயற்சி

Published On 2023-10-31 08:41 GMT   |   Update On 2023-10-31 08:41 GMT
  • கணவன்-மனைவி இடையே தகராறு எதிரொலி
  • கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

கோவை,

கோவை தடாகம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்தவர் சந்தோஷ். கட்டிட தொழிலாளி.

இவரது மனைவி தமிழ ரசி(வயது26). இவர்களுக்கு டெசிகா(4), பூமிகா(2) என 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

சந்ேதாஷ் தினசரி மது குடித்து விட்டு தான் வீட்டி ற்கு வருவார். அவர் கடந்த 3 நாட்களாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து கொண்டு இருந்தார்.

இதனை அவரது மனைவி கண்டித்தார். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சந்தோஷ் மனைவியிடம் அப்படிதான் குடிப்பேன் என கூறி விட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த தமிழரசி 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்வது என முடிவு செய்தார். அதன்படி சாணிப்பவுரை கரைத்து முதலில் தனது 2 குழ ந்தைகளுக்கும் கொடுத்தார். பின்னர் அவரும் குடித்தார். சிறிது நேரத்தில் 3 பேரும் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர்.

இரவு வீட்டிற்கு வந்த சந்தோஷ் குழந்தைகள் மற்றும் மனைவி ஆகியோர் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 3 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

அங்கு 3 பேரையும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News