உள்ளூர் செய்திகள்

ஜே.சி.பி. எந்திரம் மூலம் மரம் அகற்றப்பட்டது.

சூறைக்காற்றால் சாலையில் மரம் விழுந்தது; போக்குவரத்து பாதிப்பு

Published On 2023-06-13 09:40 GMT   |   Update On 2023-06-13 09:40 GMT
  • சாலையின் குறுக்கே மரம் சாய்ந்து அருகில் இருந்த மின்கம்பி அறுந்து விழுந்தது.
  • ஜே.சி.பி. எந்திரம் மூலம் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

பாபநாசம்:

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் நேற்று மாலை திடீரென சூறைகாற்றுடன் மழை பெய்தது.

இதில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திருப்பாலைத்துறை பகுதியில் சூறை காற்றுடன் பெய்த கனமழையால் தேசிய நெடுஞ்சாலை குறுக்கே மரம் சாய்ந்து அருகில் இருந்த மின்சார கம்பி அறுந்து விழுந்தது.

இதனால் தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உடனடியாகசம்பவ இடத்திற்கு மின்சார வாரிய அதிகாரிகளும் மின் ஊழியர்களும் விரைந்து வந்து மின்சார விநியோகத்தை நிறுத்திவிட்டு பொதுமக்கள் உதவியுடன் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

பின்னர் போக்கு வரத்து சீரமைக்கப்பட்டது .

Tags:    

Similar News