உள்ளூர் செய்திகள்

விழுப்புரம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பலி

Published On 2023-05-21 12:11 IST   |   Update On 2023-05-21 12:11:00 IST
  • விழுப்புரம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பலியானார்.
  • விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே சித்தாமூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 35) கட்டிட தொழிலாளி. இந்நிலையில் இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் பரனூர் பகுதி வழியாக வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாலை ஓரத்தில் கிடந்த கல்லில் விழுந்த விஜயகுமார் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலே பலியானார்.

இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து அரகண்ட நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த அரகண்டநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News