உள்ளூர் செய்திகள்

இளநீர் கடன் கேட்ட தகராறில் வாலிபர் கைது

Published On 2022-07-09 10:23 GMT   |   Update On 2022-07-09 10:23 GMT
  • இளநீர் கடன் கேட்ட தகராறில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
  • இளநீர் கடனாக கேட்டுள்ளார் அப்போது பாபு தர மறுத்துவிட்டார்.

கடலூர்:

கடலூர் அருகே கண்ணாரப்பேட்டை சேர்ந்தவர் பாபு (வயது 38). இவர் அதே பகுதியில் சைக்கிளில் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த விமல் என்பவர் இளநீர் கடனாக கேட்டுள்ளார். அப்போது பாபு தர மறுத்துவிட்டார். இதனால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு, முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று முன்விரோத காரணமாக விமல் தனது நண்பர் பிரேம் உடன் கண்ணாரப் பேட்டை பகுதியில் நின்று கொண்டிருந்த பாபுவை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் விமல் (வயது 35) , பிரேம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விமலை கைது செய்தனர்.

Tags:    

Similar News