உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட மிஸ்டர் டீனு பையாவை படத்தில் காணலாம்.

வேப்பூர் அருகே கஞ்சா விற்க முயன்ற வாலிபர் கைது

Published On 2022-09-23 07:04 GMT   |   Update On 2022-09-23 07:04 GMT
  • வேப்பூர் அருகே கஞ்சா விற்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
  • சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் கண்டபங்குறிச்சி சாலையில் ரோந்து சென்றனர்.

கடலூர்:

வேப்பூர் அருகே உள்ள நகர் கிராமத்தை சேர்ந்தவர் மிஸ்டர் டீனு பையா (வயது 20) இவர் கஞ்சா விற்பதாக வேப்பூர் போலிசாருக்கு தகவல் கிடைத்தது . அதனை தொடர்ந்து வேப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் கண்டபங்குறிச்சி சாலையில் ரோந்து சென்றனர். அப்போது பாப்பாத்தி அம்மன் கோவில் அருகே 1250 கிராம் கஞ்சா வைத்துக்கொண்டு விற்பனை செய்ய காத்திருந்த மிஸ்டர் டீனு பையாவை கைது செய்தனர். அவரிடமிருந்து 1250 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது.

Tags:    

Similar News