உள்ளூர் செய்திகள்
வேப்பூர் அருகே கஞ்சா விற்க முயன்ற வாலிபர் கைது
- வேப்பூர் அருகே கஞ்சா விற்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் கண்டபங்குறிச்சி சாலையில் ரோந்து சென்றனர்.
கடலூர்:
வேப்பூர் அருகே உள்ள நகர் கிராமத்தை சேர்ந்தவர் மிஸ்டர் டீனு பையா (வயது 20) இவர் கஞ்சா விற்பதாக வேப்பூர் போலிசாருக்கு தகவல் கிடைத்தது . அதனை தொடர்ந்து வேப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் கண்டபங்குறிச்சி சாலையில் ரோந்து சென்றனர். அப்போது பாப்பாத்தி அம்மன் கோவில் அருகே 1250 கிராம் கஞ்சா வைத்துக்கொண்டு விற்பனை செய்ய காத்திருந்த மிஸ்டர் டீனு பையாவை கைது செய்தனர். அவரிடமிருந்து 1250 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது.