உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சி அருகே பிளஸ்-2 மாணவியை கடத்திய வாலிபர்

Published On 2022-11-07 14:45 IST   |   Update On 2022-11-07 14:45:00 IST
  • 17 வயது மாணவி பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
  • கடந்த சில மாதங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சியை சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் வசித்து வரும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து காதலை வளர்த்து வந்தனர்.

இந்த காதல் விவகாரம் மாணவியின் வீட்டிற்கு தெரிய வரவே அவரை அவரது பெற்றோர் கண்டித்தனர். சம்பவத்தன்று மாணவி வழக்கம் போல பள்ளிக்கு சென்றார். அப்போது அவரை அவரது காதலன் திருமண ஆசை காட்டி தனது சொந்த ஊரான கள்ளக்குறிச்சிக்கு கடத்தி சென்றார். மாணவியின் பெற்றோர் அவரை அக்கம் பக்கத்தில் தேடினார்.

அப்போது தங்களது மகளை வாலிபர் கடத்தி சென்றது தெரிய வந்தது. இது குறித்து அவர்கள் காட்டூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமண ஆசை காட்டி பிளஸ்-2 மாணவியை கடத்தி சென்ற வாலிபரை தேடி வருகிறார்கள். 

Tags:    

Similar News