உள்ளூர் செய்திகள்

விருத்தாசலம் அருகே அரசு வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை

Published On 2022-08-05 08:47 GMT   |   Update On 2022-08-05 08:47 GMT
  • விருத்தாசலம் அருகே அரசு வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
  • அவரை மீட்ட பொதுமக்கள் அவரை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்

கடலூர்:

விருத்தாசலம் அருகே குப்பநத்தம் நடுத்தெருவை சேர்ந்தவர் ராமர். அவரது மகன் மணிகண்டன் (வயது 28). இவர் பி.பி.ஏ. முடித்துவிட்டு அரசு வேலைக்கு தயாராகி கொண்டிருந்தார். நீண்ட நாட்கள் படித்தும் அரசு வேலை கிடைக்கவில்லையே என்ற விரக்தியில் இருந்த அவர் அவரது ஊரில் இருந்த தோட்டத்தில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு போராடிய அவரை மீட்ட பொதுமக்கள் அவரை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News