காதலுக்கு பெற்றோர் எதிர்த்ததால் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி
- உறவினரான 22 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது
- புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள டி. கொட்டாம்பட்டியை சேர்ந்த 17 வயது மாணவி. இவர் பிளஸ்-2 படித்து முடித்து இருந்தார். மாணவிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழனியை சேர்ந்த உறவினரான 22 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் அவர்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அந்த வாலிபருடனான காதலை கைவிடுமாறு அறிவுரை கூறினார். ஆனால் மாணவி அவரது காதலை தொடர்ந்து வந்தார். பெற்றோர் பிரிந்து விடுவார்களோ என்ற பயத்தில் மாணவி இருந்தார். எனவே அவர் தனது காதலனுடன் செல்வது என முடிவு செய்தார்.
சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த மாணவி தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார். வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய மாணவியின் பெற்றோர் அவர் வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அவர்கள் இது குறித்து மகாலிங்கபுரம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவி அவரது உறவினரான வாலிபருடன் ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது. எனவே போலீசார் அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.