உள்ளூர் செய்திகள்

பாவூர்சத்திரத்தில் சிறுமியை சில்மிஷம் செய்த கடைக்காரர் கைது

Published On 2022-10-11 07:32 GMT   |   Update On 2022-10-11 07:32 GMT
  • கனகராஜ் சாமுவேல் சிறுமியை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்துள்ளார்.
  • சிறுமியின் தாயார் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

நெல்லை:

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் செல்வ விநாயகர்புரத்தை சேர்ந்தவர் கனகராஜ் சாமுவேல்(வயது 43). இவர் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தினமும் வந்து பொருட்கள் வாங்கி செல்வது வழக்கம்.

அதனை பயன்படுத்தி சம்பவத்தன்று அங்கு பொருட்கள் வாங்க வந்த சிறுமியை கனகராஜ் சாமுவேல் தொட்டு பேசி உள்ளார். மேலும் சிறுமியை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

உடனே சிறுமியின் தாயார் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கனகராஜ் சாமுவேல் அந்த சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தது உறுதியானது. இதையடுத்து அவரை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

Tags:    

Similar News