உள்ளூர் செய்திகள்
பண்ருட்டி அருகே கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சாம்பல்
- குடிசை வீடு நேற்று அதிகாலை 2 மணியளவில் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்துள்ளது.
- இது சம்பந்தமாக ஜெயராஜ் முத்தாண்டிகுப்பம் போலீசில் புகார் கொடுத்து உள்ளார்
கடலூர்:
பண்ருட்டி அருகே உள்ள மணலூர் காலனியைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 48). இவருடைய குடிசை வீடு நேற்று அதிகாலை 2 மணியளவில் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்துள்ளது. வீட்டில் யாரும் இல்லாததால் வேறு யாருக்கும் எந்த சேதமும் இல்லை வீட்டில் இருந்த துணிகள் மட்டும் எரிந்துள்ளது. இது சம்பந்தமாக ஜெயராஜ் முத்தாண்டி குப்பம் போலீசில் புகார் கொடுத்து உள்ளார். முத்தாண்டி குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.