உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே கோவிலுக்கு சென்றவர் திடீர் மாயம்

Published On 2023-09-14 12:36 IST   |   Update On 2023-09-14 12:36:00 IST
  • திருப்பதி கோவிலுக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சேகரை தேடி வருகிறார்கள்.

கடலூர்:

பண்ருட்டி லிங்க் ரோட்டைசேர்ந்தவர் சேகர் (62) ஓய்வு பெற்ற கூட்டுறவு சார் பதிவாளர். இவர் கடந்த 29-ந் தேதி இரவு 10 மணி அளவில் வீட்டிலிருந்து திருப்பதி கோவிலுக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இது குறித்து சேகரின் மனைவி சந்திரிகா பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சேகரை தேடி வருகிறார்கள். 

Tags:    

Similar News